தங்கக் கடத்தல்: அலி சப்ரி ரஹீம் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday 23 May 2023

தங்கக் கடத்தல்: அலி சப்ரி ரஹீம் கைது

 



வெளிநாடு சென்று திரும்பிய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடமிருந்து 3.5 கிலா கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சுங்கத் திணைக்களத்துக்கு தெரியப்படுத்தப்படாத குறித்த தொகை தங்கத்தை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்ததாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.


புத்தளம் மாவட்டம் தவம் கிடந்து பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீம் தொடர்ச்சியாக பல்வேறு முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோக விவகாரங்களில் சிக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment