ஜப்பான் முதலீட்டாளர்களை மீள அழைக்கும் ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Thursday 25 May 2023

ஜப்பான் முதலீட்டாளர்களை மீள அழைக்கும் ஜனாதிபதி

 



ஜப்பான் - இலங்கை நட்புறவு அமைப்பூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் முதலீட்டாளர்களை மீளவும் இலங்கையில் முதலிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஜப்பானின் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் வைத்தே இன்று ஜனாதிபதி இக்கோரிக்கையை முன் வைத்துள்ளார்.


இலங்கைக்கு பல்வேறு அடிப்படை அபிவிருத்தி உதவிகளை கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக ஜப்பான் வழங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment