கான்ஸ்டபிளை தாக்கிய பெண் உட்பட மூவர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday 25 May 2023

கான்ஸ்டபிளை தாக்கிய பெண் உட்பட மூவர் கைது

 



மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த இரு இளைஞர்களை நிறுத்தி விசாரித்ததன் பின்னணியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் 51 வயது பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்


பேலியகொட பாலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையிலேயே குறித்த பெண்ணும் 21 மற்றும் 22 வயது இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment