'தேதி' குறிக்க வெட்கப்படும் தே.ஆ.கு தலைவர் - sonakar.com

Post Top Ad

Saturday 15 April 2023

'தேதி' குறிக்க வெட்கப்படும் தே.ஆ.கு தலைவர்

 



தேர்தலுக்கான தேதி குறிப்பதும், அதனைத் தள்ளிப் போடுவதுமான தற்பொதைய சூழ்நிலையை நினைத்து வெட்கப்படும் தேர்தல் ஆணைக்குழு தலைவர், அடுத்த தடவை 'எல்லாம்' சரி வந்த பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட பின்னணியிலேயே தேதி குறிக்கப் போவதாக விளக்கமளித்துள்ளார்.


உள்ளூராட்சித் தேர்தலை அரசு நடாத்தப் போவதில்லையென பெருவாரியான நம்பிக்கை நிலவுகின்ற போதிலும் அவ்வப்போது நம்பிக்கையூட்டப்பட்டு வருகிறது.


இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை நடாத்தி ஆட்சியை ஸ்தீரப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளில் ரணில் தரப்பு ஈடுபட்டுள்ளதுடன் எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் அமைச்சர்களாகவும் பலர் வரிசையில் காத்திருப்பதால், நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment