வாக்குச் சீட்டுகளை அச்சடித்து முடிப்பது சந்தேகம் - sonakar.com

Post Top Ad

Friday 17 March 2023

வாக்குச் சீட்டுகளை அச்சடித்து முடிப்பது சந்தேகம்

 



உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சடிப்பதற்கான நிதி இன்னும் தரப்படவில்லையென சுட்டிக்காட்டியுள்ள அரசாங்க அச்சகம், இன்று நிதி கிடைத்தாலும் அச்சுப் பணிகள் முடிவுற ஏப்ரல் 19ம் திகதியாகும் என தெரிவிக்கிறது.


பணம் கிடைக்கும் நாளிலிருந்து வார இறுதி மற்றும் விடுமுறைகள் தவிர 33 நாட்கள் தேவைப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஏலவே, அரசுக்கு தேர்தலை நடாத்தும் எண்ணமில்லையெனவும் சாத்தியமில்லையெனவும் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment