அநுரவும் தேர்தலை பின் போடச் சொன்னார்: ரணில் - sonakar.com

Post Top Ad

Thursday 23 February 2023

அநுரவும் தேர்தலை பின் போடச் சொன்னார்: ரணில்

 



உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தேர்தல் பின் போடப்படும் எனும் சந்தேகம் நிலவி வருகின்ற நிலையில், அதற்கான பொறுப்பை ஜனாதிபதி மீது சுமத்துவதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.


இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்றில் கருத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தலை பின் போடுமாறு ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கவும் தன்னிடம் கேட்டதாக நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.


தேர்தலை நிறுத்துவதற்கான  உத்தரவை நீதி மன்றமே வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment