இலங்கையில் வாகன திருட்டு அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 29 October 2022

இலங்கையில் வாகன திருட்டு அதிகரிப்பு

 



பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு கடுமையான முயற்சிகள் இடம்பெற்று வரும் அதேவேளை நாட்டில் குற்றச் செயல்களும் கணிசமான அளவு அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இப்பின்னணியில் வாகன திருட்டும் வெகுவாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ். செப்டம்பர் மாதம் 30ம் திகதியோடு இவ்வருடத்தில் மாத்திரம் 1405 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.


இதில் 12 பஸ் மற்றும் 16 லொறி, 25 வேன், 14 கார், 311 முச்சக்கர வண்டிகளும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment