டயானா நாடாளுமன்றிலேயே கஞ்சா வளர்க்கலாம்: ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Thursday 22 September 2022

டயானா நாடாளுமன்றிலேயே கஞ்சா வளர்க்கலாம்: ஹர்ஷ

 



நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த கஞ்சா வளர்ப்பு, கஞ்சா ஏற்றுமதி என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்கும் டயானாவுக்கு நாடாளுமன்ற வளாகத்திலேயே இடம் ஒதுக்கி கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார் ஹர்ஷ டி சில்வா.


கஞ்சா ஏற்றுமதியூடாக பணம் கொண்டு வரும் டயானாவின் யோசனையைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவிக்கும் அவர், அதையும் மீறி கஞ்சா வளர்த்தே ஆக வேண்டும் என்றால் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் வெற்றிடம் ஒன்றை டயானாவுக்கு வழங்கலாம் என விளக்கமளித்துள்ளார்.


இரவு கேளிக்கை, உல்லாச பொழுது போக்கு, போதைப்பொருள் போன்ற விடயங்களிலேயே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா தொடர்ச்சியாக அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment