தேவாலய கைக்குண்டு; மருத்துவரின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Monday 14 March 2022

தேவாலய கைக்குண்டு; மருத்துவரின் விளக்கமறியல் நீடிப்பு

 


பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கைதான ஓய்வுபெற்ற மருத்துவர் ஷேர்லி ஹேரத் மற்றும் மேலும் இருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட மாட்டாது என அரசு தரப்பு தெரிவித்துள்ள அதேவேளை விளக்கமறியல் இம்மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இருவர் ஏலவே விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment