சவுதியிடம் நேரடி முதலீடு கோரும் ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Tuesday 15 March 2022

சவுதியிடம் நேரடி முதலீடு கோரும் ஜனாதிபதி

 


இலங்கையில் சவுதி அரேபியா நேரடி முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.


விவசாயம், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க எரி சக்தி போன்ற துறைகளில் 'வாய்ப்புகள்' அதிகம் இருப்பதாக சவுதி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எடுத்துக் கூறியுள்ள ஜனாதிபதி, சவுதியின் நேரடி முதலீட்டை நாடியுள்ளார்.


கொரோனா சூழ்நிலையிலேயே நாடு பாரிய சவால்களை சந்தித்து வருவதாகவும் இலங்கையில் முதலீட்டுக்கான கதவுகள் திறந்தேயிருப்பதாகவும் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment