எரிபொருள் வரிசையில் இருவருக்கிடையில் இடம்பெற்ற தகராறு கொலையில் முடிந்த சம்பவம் நிட்டம்புவயில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி ஓட்டுனர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
29 வயது இளைஞனே கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கர வண்டி சாரதி தேடப்படுவதாக நிட்டம்புவ பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment