இலங்கை மின்சார சபைக்கு ஒரு வார காலத்துக்குத் தேவையான எரிபொருள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் உதய கம்மன்பில.
இப்பின்னணியில், ஒரு வார காலத்துக்கு மின் விநியோகம் சீராக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலையில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்றும் நாட்டின் பல பாகங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்தும் சீராகி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment