எனது ஆட்சியில் மக்கள் 'மகிழ்ச்சியாக' இருந்தார்கள்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Monday 21 February 2022

எனது ஆட்சியில் மக்கள் 'மகிழ்ச்சியாக' இருந்தார்கள்: மைத்ரி

 


 

தனது ஆட்சியில் நாட்டு மக்களுக்கு  தற்போது போன்று கவலைகள் எதுவுமின்றி மகிழ்ச்சியாகவே இருந்ததாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


பொருளாதாரம், விவசாயம் முதல் அனைத்தும் தற்சமயம் சிக்கலாகிப் போயுள்ளதாகவும் மக்கள் இன்னல்களுக்கு முகங் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்ற அவர், தனது ஆட்சிக் காலத்தின் அனைவரும் தனக்கு ஒத்துழைத்ததாகவும், உலக அளவில் உதவிகள் கிடைத்து வந்ததாகவும் தெரிவிக்கிறார்.


அதனால் தான், வாழ்க்கைச் செலவு மிகவும் குறைவாக இருந்ததாகவும் பொருளாதாரம் செழிப்பாக இருந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment