ஆசிரியர்களின் போராட்டம் வெற்றி; அரசு இணக்கம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 10 November 2021

ஆசிரியர்களின் போராட்டம் வெற்றி; அரசு இணக்கம்!

 


சம்பள பிரச்சினையை முன் வைத்து ஆசிரியர்கள் - அதிபர்கள் நடாத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மூன்று கட்டங்களில் சம்பள அதிகரிப்பு அரசாங்கம் முன்னர் இணங்கியிருந்த போதிலும் அதனை நிராகரித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன தொழிற்சங்கங்கள்.


இந்நிலையில், இன்றைய தினம் அரசாங்கம் ஒரே தடவையில் அதிகரிப்பை வழங்க இணங்கியுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார். இப்பின்னணியில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment