சீரற்ற காலநிலை: இதுவரை 20 பேர் மரணம் - sonakar.com

Post Top Ad

Wednesday 10 November 2021

சீரற்ற காலநிலை: இதுவரை 20 பேர் மரணம்

 


இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற கால நிலையால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.


புத்தளம், பதுளை, மாத்தளை, முல்லைத்தீவு, குருநாகல், காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் மரணங்கள் பதிவாகியுள்ளன.


17 மாவட்டங்களிலுள்ள 126 பிரதேச சபை பிரிவுகளில் 17,481 குடும்பங்களைச் சேர்ந்த 62,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment