நிருபமா சர்ச்சை ; பிரதமர் அவதானம் - sonakar.com

Post Top Ad

Tuesday 5 October 2021

நிருபமா சர்ச்சை ; பிரதமர் அவதானம்

 



பன்டோரா பேப்பர்ஸ் ஊடாக கசிந்திருக்கும் சொத்து குவிப்பு விவகாரத்தில் தொடர்பு பட்டுள்ள நிருபமா ராஜபக்ச தொடர்பில் பிரதமர் கவனம் எடுத்துள்ளதாகவும் இது தொடர்பிலி தகவல் திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிருபமா மற்றும் அவரது கணவர் நடேசனின் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமருக்கோ ராஜபக்ச குடும்பத்துக்கோ எதுவும் தெரியாது என பெரமுன தரப்பில் தன்நிலை விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, பசில் ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய மல்வானை வீட்டினை அவருக்கு விற்பனை செய்தது நடேசன் என அப்போது வெளியாகியிருந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்க நடேசன் எழுதிய பிரத்யேக கடிதம் ஒன்றின் பிரதியும் பன்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியாகியுள்ளது.


எனினும், குறித்த காணிக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லையென பசில் ராஜபக்ச நீமறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment