சு.கட்சியினரை யாரும் பிடித்து வைக்கவில்லை: திலும் - sonakar.com

Post Top Ad

Sunday 11 July 2021

சு.கட்சியினரை யாரும் பிடித்து வைக்கவில்லை: திலும்

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை யாரும் பலவந்தமாக அரசாங்கத்துக்குள் பிடித்து வைத்திருக்கவில்லையென தெரிவிக்கிறார் திலும் அமுனுகம.


அவர்கள் விரும்பினால் அரசாங்கத்தை விட்டுச் செல்லலாம் எனவும் அதற்கு எந்தத் தடையுமில்லையெனவும் திலும் தெரிவிக்கிறார்.


விரைவில் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடி விட்டு சுதந்திரக் கட்சி தீர்மானமொன்றை எடுக்கப் போவதாக தயாசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment