மேல் மாகாணத்திலிருந்து நேற்று 1393 தொற்ளாளர்கள் - sonakar.com

Post Top Ad

Saturday 8 May 2021

மேல் மாகாணத்திலிருந்து நேற்று 1393 தொற்ளாளர்கள்

 


 

நேற்றைய தினம் இலங்கையில் கண்டறியப்பட்டிருந்த தொற்றாளர்களுள் 1393 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


குறிப்பாக, இதில் 591 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 434 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 368 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


சீதுவ பகுதியிலிருந்து 90 பேரும் வத்தளை பகுதியிலிருந்து 50 பேரும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment