அரசின் 'கொள்கைக்கு' சர்வதேச அங்கீகாரம்: ஜோன்ஸ்டன் - sonakar.com

Post Top Ad

Thursday 25 March 2021

அரசின் 'கொள்கைக்கு' சர்வதேச அங்கீகாரம்: ஜோன்ஸ்டன்

 


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானமானது நடைமுறை அரசின் கொள்கைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளமையை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.


தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஜப்பான், இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காதமை குறித்த நாடுகள் அரசுக்கு வழங்கியுள்ள அங்கீகாரம் என அவர் விளக்கமளித்துள்ளார்.


தீர்மானத்துக்கு ஆதரவாக 21 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்திருந்த அதேவேளை குறித்த நாடுகள் ஆதரவும் அளிக்காத நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment