இலங்கை வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதமரை சந்திப்பதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மேற்கொண்ட முயற்சிக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை இரத்துச் செய்யப்பட்டிருந்ததையடுத்து அவரை சந்திக்க முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்திருந்தனர். எனினும் அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது.
இந்நிலையில், பாக். தூதரகம் குறித்த சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்துள்ளதாக மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment