வெலிக்கட சிறைச்சாலையை அங்கிருந்து ஹொரன பகுதிக்கு இடம் மாற்றுவதற்கான திட்டம் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த.
வெலிகடையில் சன நெருக்கடியிருப்பதாகவும் அதனைத் தவிர்க்கும் முகமாகவும் அதேவேளை நவீன பாதுகாப்புடன் கூடிய சிறைச்சாலையை உருவாக்கும் நிமித்தமும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
அபாயகரமான கைதிகளை மேலதிக பாதுகாப்புடன் கூடிய சிறைக் கூடங்களில் அடைப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment