ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இன்று காலை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணையின் பின் ஒப்படைக்கப்பட்டிருந்த அறிக்கையினை வெளியிடுவதை அரசு தாமதப்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன இன்று காலை அறிக்கையினை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளமையும் ஏலவே இதன் பிரதிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment