நிதி மோசடி வழக்கிலிருந்து மஹிந்தானந்த விடுவிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 25 February 2021

நிதி மோசடி வழக்கிலிருந்து மஹிந்தானந்த விடுவிப்பு

 


2017ம் ஆண்டு மே மாதம் சட்டமா அதிபரினால் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நிதி மோசடி வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் எனும் பெயரிலான தொழிற்சங்கத்திலிருந்து 3.9 மில்லியன் ரூபா மோசடியாகப் பெற்றுக் கொண்டதாக அவர் மீது அக்காலப் பகுதியில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


இந்நிலையில், இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்றம் அவரை அவ்வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.

No comments:

Post a Comment