மஹர சிறைச்சாலை வன்முறையில் உயிரிழந்த, கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்ட மூவரின் உடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளது வத்தளை நீதிமன்றம்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சில கைதிகளுக்கு கொரோனா தொற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததன் பின்னணியில் எரியூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் எஞ்சியுள்ள உடலங்களை அடக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
வத்தளை நீதிமன்றில் இன்று இவ்வழக்கு விசாரணை தொடர்ந்த நிலையில் நீதிபதி இவ்வாறு அனுமதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment