தலதா மாளிகையில் 4 பொலிசாருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Sunday 17 January 2021

தலதா மாளிகையில் 4 பொலிசாருக்கு கொரோனா

 


தலதா மாளிகையில் பாதுகாப்பு கடமையில் பணியாற்றிய நான்கு பொலிசாருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் ஊழியர்கள் உள்ளடங்கலாக  200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் முனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.


அண்மையில் உக்ரைனிய சுற்றுலாப் பயணிகள் தலதா மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டிருந்த அதேவேளை அங்கு இதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தமையும் எனினும் சுற்றுலாப் பயணிகளால் கொரோனா பரவல் இல்லையென அமைச்சர் பிரசன்ன தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment