நேற்றைய தினம் (6) கொழும்பு - கம்பஹா உட்பட 13 மாவட்டங்களிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் கொழும்பிலிருந்து 206, கம்பஹாவிலிருந்து 97, களுத்துறையிலிருந்து 81 பேர் உள்ளடங்குகின்றனர். கொழும்பிலிருந்து தொடர்ந்தும் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டு வருகின்ற அதேவேளை, அம்பாறை - இரத்னபுரி மற்றும் திருகோணமலையிலிருந்தும் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
தற்சமயம் 7006 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment