நாளைய தினம் சுற்றுலாப் பயணிகள் வருகையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரஷ்ய விமானப் பயணம் 31ம் திகதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 300 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் இலங்கை சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், தற்சமயம் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு திட்டம் பின்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment