ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையொன்றை முன் வைக்க ஐக்கிய இராச்சியம் - அமெரிக்காக கூட்டாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை நடாத்துவதற்கு ஏதுவாக கடந்த அரசு பேரவையில் வாக்குறுதியளித்து இணங்கியிருந்ததன் பின்னணியில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த 30ஃ1 தீர்மானத்திலிருந்து நடைமுறை அரசு விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தது.
இதன் பின்னணியில் குறித்த நாடுகளில் தீவிரமாக இவ்விடயம் கலந்துரையாடப்பட்டு வந்ததுடன் எதிர்வரும் மார்ச் மாதத்தில் புதிய பிரேரணை எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment