அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தனதாக்கிக் கொண்டுள்ள நிலையில், பௌத்த பிக்குகள் உலக ஆசைகள் நிறைந்தவர்கள் என தெரிவித்துள்ளார் அத்துராலியே ரதன தேரர்.
இன்றும் எத்தனையோ விகாரைகளின் நிலம் மற்றும் நிர்வாக சர்ச்சைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்ற அவர், தாம் சமாதான முறையில் தமது கட்சிப் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
சங்க சபை உறுதியான தலைமைத்துவமில்லாததால் சிதைந்து போயிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்ற அதேவேளை மறு புறத்தில் ஜனாதிபதிக்கு எதிரான பௌத்த துறவிகளின் கருத்துக்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment