மஹர வன்முறை: டிசம்பர் 30ம் திகதி அறிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday 23 December 2020

மஹர வன்முறை: டிசம்பர் 30ம் திகதி அறிக்கை

 


அண்மையில் மஹர சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குழுவின் முழுமையான அறிக்கை இம்மாத இறுதியில் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உயர் நீதிமன்ற நீதிபதி சரோஜினி வீரவர்தன தலைமையில் அமைச்சு மட்டத்தில் இக்குழு நியமிக்கப்பட்டிருந்த அதேவேளை நூற்றுக்கணக்கானோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.


குறித்த சம்பவத்தில் உயிரிழந்த கைதிகள் பலருக்கும் கொரோனா தொற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த அதேவேளை சட்டச் சிக்கல்கள் காரணமாக உடலங்கள் எரியூட்டப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment