இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரழந்தோரின் எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ளது. அக்கரைப்பற்று (அ'சேனை) பகுதியைச் சேர்ந்த 54 வயது ஒருவரின் மரணமே இறுதியாக இணைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் மரணித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் 8257 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment