அடக்க அனுமதிக்கக் கூடாது: மீண்டும் ஞானசார! - sonakar.com

Post Top Ad

Tuesday 10 November 2020

அடக்க அனுமதிக்கக் கூடாது: மீண்டும் ஞானசார!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை எரிப்பது எனும் தீர்மானித்தை முஸ்லிம்களுக்காக மாற்றக் கூடாது எனவும் அதனால் பின் விளைவுகள் வரும் எனவும் தெரிவிக்கிறார் ஞானசார.


நேற்றைய தினம், அடக்க அனுமதி வழங்குவதற்கேற்ப 'தகுந்த' இடத்தைப் பார்ப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவசர அவசரமாக CTJ என அறியப்படும் அமைப்பு சிங்கள மொழியில் கடிதம் வெளியிட்டு அதனூடாக புதிய சிக்கல்கள் உருவாகியுள்ளது.


இப்பின்னணியில், ஞானசார உட்பட பேரினவாத கடும்போக்கு வாதிகள் இதற்கெதிராக கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளதுடன் ஒரே நாடு ஒரே சட்டமாக இருக்க வேண்டும் எனவும் முஸ்லிம்களுக்கு தனியான சலுகைகள் வழங்கப்பட முடியாது எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment