23ம் திகதி முதல் பாடசாலைகளை திறக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Thursday 19 November 2020

23ம் திகதி முதல் பாடசாலைகளை திறக்க முஸ்தீபு

 


மேல் மாகாண மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் எதிர்வரும் 23ம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆறாம் தரத்துக்கு மேற்பட்ட அனைத்து வகுப்புகளும் இயங்கும் என கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிக்கிறார். 


ஏலவே நவம்பர் 9ம் திகதி திட்டமிடப்பட்டிருந்த போதிலும் கொரோனா சூழ்நிலையில் மேலும் இரு வாரங்கள் பின்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment