நாடாளுமன்றில் பணிபுரியும் SIக்கும் கொரோனா - sonakar.com

Post Top Ad

Saturday 24 October 2020

நாடாளுமன்றில் பணிபுரியும் SIக்கும் கொரோனா

 


நாடாளுமன்ற புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாடாளுமன்றில் கடமை புரியும் பொலிஸ் ஊழியர்களுக்கான உணவுத் தேவை நிமித்தம் பேலியகொட மீன் சந்தைக்கு இவர் சென்றிருந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் அவரோடு நெருக்கமாக இருந்த மேலும் 7 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்றுக்குள் இவர் செல்வதில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment