காலவரையறையின்றி மூடப்பட்டிருந்த தம்புள்ளை பொருளாதார மையம் இன்று காலை 6 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களாக முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீளத் திறக்கப்பட்டு வழமையான நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் வர்த்தக நடவடிக்கைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், சுகாதார முறைமைகளை கடைப்பிடிக்குமாறு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment