பேருவளையில் கொரோனா பரிசோதனை நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday 1 April 2020

பேருவளையில் கொரோனா பரிசோதனை நடவடிக்கை



பேருவளை பிரதேசத்தில் நிலவி வரும் கொரோனா தொற்று அபாயத்தின் பின்னணியில்  அங்கு பரிசோதனை நிலையம் ஒன்று அமைத்து நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகிறது.



சீனங்கோட்டை, பன்னில உட்பட்ட அனைத்து பகுதிகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட நபர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவதோடு வைரஸ் தாக்கம் கண்டறியப்படின் மேலதிக நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டிருப்பதாக நகர சபை தலைவர் மசாஹிம் முஹம்மத் தெரிவித்தார்.

பன்னில பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பல இடங்களில் உலவியதோடு சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் பிரதேசத்தில் பரிய அளவில் பரிசோதனை நடவடிக்கைகளை நடாத்துவது பாதுகாப்பானது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பன்னிலயைச் சேர்ந்த 51 குடும்பங்கள் தமது சுய விருப்பின் பேரிலேயே பரிசோதனைகளில் பங்கேற்றுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment