இஸ்ரேலிய சுகாதார அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மன் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கின்றமை உறுதியாகியுள்ளதையடுத்து அந்நாட்டு பிரதமர் மீண்டும் தன்னை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
71 வயதான இஸ்ரேலிய சுகாதார அமைச்சர் நெதன்யாஹுவோடு மிக நெருங்கிய தொடர்புகளை வைத்து வந்ததோடு இருவருமாக பல்வேறு அரசியல் சந்திப்புகளில் அண்மைக்காலமாக பங்கேற்று வந்திருந்தனர்.
லிட்ஸ்மன் அவரது பாரியார் உட்பட 6200 இஸ்ரேலியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment