இலங்கையில் கொரோனா வைரஸ தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.
63 பேர் இதுவரை குணமடைந்துள்ள அதேவேளை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நூற்றுக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றும் வருவதோடு பல இடங்களிலிருந்தும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு சந்தேக நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
ஜாஎலயில் அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளான தொடர்பில் பின்னணியில் இன்றும் கிரான்ட்பாஸ் பகுதியிலிருந்து 113 பேர் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும், இவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் பலர் காயமுற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment