கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் உடலங்களை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கமைவாக புதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.
இது தொடர்பில் சோனகர்.கொம்முடன் உரையாடிய அவர் தற்போதைய சூழ்நிலை தமக்கு மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்திருந்த அதேவேளை இது தொடர்பிலான தனது விஞ்ஞான பார்வையை ஒரு ஆவணமாக தயாரித்து அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை, குறித்த ஆவணத்தை ஜாதிக சமகி பலவேகய அனுமதித்தால் கட்சியின் நிலைப்பாடாகவே வெளியிடுவதற்குமான முயற்சி இடம்பெறுவதாகவும் அறியமுடிகிறது.
மருத்துவர் ராஜித சேனாரத்னவின் கருத்தடங்கிய ஆவணம் மின் நூல் வடிவத்தில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment