கொரோனா வைரஸ் பாதிப்புள்ள ஒரு நபர் அட்டுலுகம நகரில் உலாவித்திரிந்ததாக கூறப்படுவதன் பின்னணியில் நகரை முழுமையாக தனிமைப்படுத்தியுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
இப்பின்னணியில் நகரில் வாழும் சுமார் 200 பேரைக் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊரடங்கைப் பலப்படுத்தும் வகையில் இராணுவத்தினரும் பிரதேசத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment