அட்டுலுகம சென்று வந்த இருவருக்கு கட்டாய தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Saturday 28 March 2020

அட்டுலுகம சென்று வந்த இருவருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்


அட்டுலுகமவில் கொரோனா பாதிப்புள்ள நபர் ஒருவர் உலவித்திரிந்ததன் பின்னணியில் குறித்த நபரின் பெற்றோரும் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், அட்டுலுகம சென்று வந்த பலபிட்டியைச் சேர்ந்த இருவரைக் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க உத்தரவிட்டுள்ளனர் பொலிசார்.

நேற்றைய தினம் அட்டுலுகம நகரை பொலிசார் தனிமைப்படுத்திய அதேவேளை பாதிக்கப்பட்ட நபர் சுகமடைந்து விட்டதாக போலியான செய்தி பரவியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment