எதிர்வரும் 2 மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும் தட்டுப்பாடு எதுவுமில்லையெனவும் பிரதான நிறுவனங்கள் கூட்டாக தெரிவித்துள்ளன.
எனவே, மக்கள் இது தொடர்பில் பதற்றப்படத் தேவையில்லையெனவும் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகாது எனவும் விளக்கமளிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய பொருட்கள் போன்று எரிபொருளையும் முன் கூட்டியே கொள்வனவு செய்வதற்கு மக்கள் அவதியுறும் நிலையின் பின்னணியில் இவ்விளக்கம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment