இலங்கையில் கொரோனா: எண்ணிக்கை 80ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 22 March 2020

இலங்கையில் கொரோனா: எண்ணிக்கை 80ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளது.



அண்மையில் சுவிட்சர்லாந்திலிருந்து வந்து யாழில் சமய போதனை நடாத்திச் சென்ற மதத் தலைவர் ஒருவர் அந்நாட்டில் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்ற ஒருவரும் தற்போது வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் 220க்கு அதிகமானோர் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளதோடு 10,000க்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment