இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளையடுத்து சுமார் 10 நிமிடங்கள் சட்டி பானைகளில் தட்டியும் கை தட்டியும் ஓசையெழுப்பி கொரோனா சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர், தாதியர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர் இந்திய மக்கள்.
எனினும், சில இடங்களில் குறித்த நடவடிக்கை தீவிரமடைந்து ஓசை எழுப்பினால் கொரோனாவே ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் பலர் தமது பாத்திரங்களில் அடித்து ஓசையெழுப்பிக் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை பல இந்திய நகரங்களை 31ம் திகதி வரை மூடி வைக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment