இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை இன்று காலையுடன் 100 ஐத் தொட்டுள்ளது.
முதன் முதலில் வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக கண்டறியப்பட்ட நபர் உட்பட மேலும் ஒருவர் தற்போது சுகமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இன்று மூவர் பட்டியலில் இணைந்துள்ளனர்.
இத்தாலியிலிருந்து இலங்கை வந்து, மருத்துவ பரிசோதனைகளை தவிர்த்து வரும் நபர்களைத் தொடர்ந்தும் தேடி வருகின்ற நிலையில் பல இடங்களில் ஊரடங்கும் அமுலில் உள்ளது. இந்நிலையில், தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment