சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வழங்கப்பட்டிருப்பது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வகை பீதியை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கிறார் உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர்.
அரசின் குறித்த நடவடிக்கை தவறான உதாரணம் எனவும் சாய்ந்தமருக்கு தனியான நகர சபை வழங்கப்பட்டிருப்பது அடிப்படைவாதத்துக்கு இன்னும் வலுவூட்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
குறித்த நகர சபை தமிழ் மக்கள் மத்தியிலும் அதிருப்தியை உருவாக்கியிருப்பதாக அவர் தெரிவிக்கின்ற அதேவேளை மஹிந்த ராஜபக்சவின் இன்னுமொரு தோழரான கருணா அம்மன் இது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment