மத்தள விமான நிலையத்தில் சர்வதேச விமான போக்குவரத்தை அதிகரிப்பதற்கான திட்டம் ஒன்று அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தள மற்றும் இரத்மலான விமான நிலையங்களுக்கு வரக்கூடிய சர்வதேச விமான சேவைகளுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி குறித்த இரு விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்யப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட மத்தள விமான நிலையம் சர்வதேச நிறுவனங்களைக் கவர மறுத்ததுடன் பாதுகாப்பு சிக்கல்களும் தீர்க்கப்படாத நிலையில் முடங்கிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment