மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள், புது வருட சலுகைகளை கொடுக்க இயலாததை மூடி மறைப்பதற்காகவே சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்பாக நாடாளுமன்றைக் கலைப்பதற்கு முயற்சி இடம்பெறுகிறது என தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
ஜாஎலயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்றின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பாக இத்தனை அவசரமாக, அதுவும் புது வருடத்துக்கு முன்பாக கலைக்க முற்படுவது அரசின் இயலாமை என விளக்கமளித்துள்ளார்.
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும் அரசைக் கொண்டு நடாத்துவதற்கான பணம் இல்லையென பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment