ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இடையேயான கூட்டணி விவகாரம் பெரமுன உறுப்பினர்களின் கருத்துக்களால் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் எதிர்வரும் செவ்வாயன்று மஹிந்த-மைத்ரி இடையே விசேட சந்திப்பொன்று நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சியினர் 'நண்பர்களாக' இருந்துவிட்டு போகலாம், பங்காளிகளாக முடியாது என தெரிவித்து வரும் பெரமுன உறுப்பினர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் போது சுதந்திரக் கட்சியினர் மஹிந்த - கோட்டாவின் படங்களை உபயோகப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment