நச்சு வாயு சுவாசித்ததன் பின்னணியிலான சுகயீனம் காரணமாக யக்கல பகுதியில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 15 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை தொழிற்சாலையில் பூச்சி நாசினி மருந்து உபயோகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அதன் தாக்கமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வாந்தி, தலைவலி மற்றும் தோலரிப்பு போன்ற அறிகுறிகளுடன் குறித்த 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment